Tuesday 7th of May 2024 09:40:45 PM GMT

LANGUAGE - TAMIL
.
ரி-20  உலகக்கிண்ணம் - 2020: தொடர் பிற்போடப்படுகிறது?

ரி-20 உலகக்கிண்ணம் - 2020: தொடர் பிற்போடப்படுகிறது?


அவுஸ்ரேலியாவில் நடைபெறவிருக்கும் ரி-20 உலக்கிண்ண தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்ரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வருவதனால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளதாகவும் அக்கலந்துரையாடலில் இறுதி முடிவு எட்டப்பட்டு இது குறித்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் அத்தகவல் மூலம் அறிய முடிகிறது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE